எனது உயிருள்ள வரை ஜெ.வுக்கு விசுவாசமாக இருப்பேன்-திண்டுக்கல் சீனிவாசன்
திமுகவில் திண்டுக்கல் சீனிவாசன் சேரப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் அவர். இதுகுறித்து அவர் கூறுகையில்,
1972ல் அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டனாக சேர்ந்து, 1973ல், திண்டுக்கலில் நடந்த முதல் லோக்சபா இடைத்தேர்தலின் போது அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு உழைத்தவர்களில் நானும் ஒருவன்.
அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, என்னை, 1987ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை திண்டுக்கல் மாவட்ட செயலராக நியமனம் செய்தும், 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட வைத்தார்.
ஐந்து முறை எம்.பி., தேர்தலில் வேட்பாளராக நிற்க வைத்து, நான்கு முறை வெற்றி பெறவும் வைத்துள்ளார்.
கடந்த 2000 முதல் 2006 வரை அ.தி.மு.க. பொருளாளராக நியமனம் செய்தும், இரண்டு முறை சட்டசபை வேட்பாளராக அறிவித்தும், 2006 முதல் இன்று வரை திண்டுக்கல் மாவட்ட அவைத் தலைவராக என்னை நியமனம் செய்துள்ளார்.
எனக்கு அரசியலில் அந்தஸ்தை கொடுத்த ஜெயலலிதாவுக்கு உயிருள்ளவரை விசுவாசத்துடன் செயல்படுவேன். நான், திமுகவில் சேரப்போவதாக பொய் செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.