ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியர் மீது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil

தாக்கப்பட்ட மாணவர் பெயர் ஹர்வீர் சிங். மெல்போர்ன் நகரில் தாக்குதல் நடந்துள்ளது. ரிங்வுட் பகுதியில்த சமீபத்தில் இவர் தான் பார்ட் டைமாக வேலை செய்யும் இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தபோது ஒரு இளைஞர் கும்பல் வழிமறித்து தாக்கி பணத்தைப் பறித்துச் சென்றது.
இதுகுறித்து சிங் கூறுகையில், அக்கும்பலில் நான்கு அல்லது ஐந்து பேர் இருந்தநர். என்னை தாக்கத் தொடங்கியதும் நான் அங்கிருந்து தப்பி ஓடி போலீஸாரை அழைத்தேன்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள கத்தி ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது என்றார் சிங்.
இருப்பினும் இந்திய மாணவர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளதாக ஆஸ்திரேலியா போலீஸ் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications