சென்னை-பெங்களூர் மெயில் ரயிலில் தீ விபத்து
அரக்கோணம்: சென்னையில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டு சென்ற ரயிலில் திடீரென தீப்பிடித்தது. அதிகாரிகள் தக்க சமயத்தில் நடவடிக்கை எடுத்ததால் பெரிய விபத்து நேராமல் தடுக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு 11. 15 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூர் மெயில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது. அரக்கோணத்திற்கு அருகே சென்று கொண்டிருக்கும்போது ஏ.சி. பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.
இதை பார்த்த பயணிகள் பீதியடைந்தனர். அப்போது, அந்த பெட்டியில் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்த பரிசோதகர் எம். கோவிந்தராஜ் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார்.
இதையடுத்து ரயில் சிப்பந்திகள் ஓடி வந்து தீயை அணைத்தனர். சுமார் அரை மணி நேரம் கழித்து ரயில் புறப்பட்டது. அதிகாரிகள் தக்க சமயத்தில் நடவடிக்கை எடுத்ததால் பெரிய விபத்து நேராமல் தடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications