தர்மபுரி அருகே 2 இரவு நேர காவலாளிகள் கொடூரமாகக் கொலை
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் தடங்கம் என்ற இடத்தில் இரவு நேரக் காவலாளிகள் இருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தடங்கம் பகுதியில் ஒரு ஸ்பின்னிங் மில் உள்ளது. இது கடந்த 10 வருடங்களாக இயங்கவில்லை. இந்த மில்லுக்கு இரவு நேர காவலாளிகளாக நடராஜன், ராஜன் என்ற இருவர் செயல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை இருவரும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாகக் கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இருவரும் கொலை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications