கெளரவக் கொலை தடுப்பு சட்ட மசோதாவை இறுதி செய்ய அமைச்சர்கள் குழு அமைப்பு

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்ட்டது.
இதுகுறித்து மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில்,
கெளரவக் கொலைகளை தடுக்கும் வகையில், இந்தியன் பீனல் கோட் மற்றும் குற்றத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த விவாதத்தின்போது ஒருமித்த கருத்து ஏற்படாத காரணத்தால் இதுகுறித்து அரசுக்கு யோசனைகளைத் தெரிவிக்க அமைச்சர்கள் குழுவை அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த சட்டத் திருத்தத்தை குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு உள்ளது. இதுகுறித்து விரைவில் மாநில அரசுகள் தங்களது கருத்துக்களையும், யோசனைகளையும் அரசுக்கு தெரிவிக்கும் என நம்புகிறோம். அதன் பின்னர் வரைவு மசோதா உருவாக்கப்பட்டு குளிர்காலக் கூட்டத்தொடரில் வைக்கப்படும் என்றார்.
இந்த சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு நிலவி வருவதாக தெரிகிறது. குறிப்பாக ஹரியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்கள் இதை கடுமையாக எதிர்க்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications