கண்டன பேரணி: காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் மீது போலீஸ் தடியடி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள அரசை கண்டித்து திருவனந்தபுரத்தில் சட்டசபை அருகே போராட்டம் நடத்திய காங்கிரஸ் மாணவர் அமைப்பினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

கல்வித் துறையை கேரள அரசு வியாபாரமாக்குவதாகக் கூறி காங்கிரஸ் மாணவர் அமைப்பினரான கேரள மாணவர் சங்கம் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள சட்டசபையை நோக்கி கண்டன பேரணி நடத்தியது.

கேரள மாணவர் சங்க மாநில தலைவர் ஷாபி தலைமையில் நடந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையொட்டி சட்டசபை முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் அத்துமீறி சட்டபேரவை வாளகத்திற்குள் நுழைய முயன்றனர்.

அப்போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆர்ப்பாட்டகாரர்கள் திடீரென போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதையடுத்து போலீசார் பேரணியில் கலந்து கொண்டவர்களை தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விரட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+