கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் பெண் தீக்குளிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ள ராதிகா என்ற பெண் தீக்குளித்து விட்டார்.
கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்த வெற்றி -ராதிகா தம்பதிகளுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.
நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு வெற்றி வீட்டிற்கு வந்தார். அப்போது மனைவி ராதிகா கணவனுக்கு சாப்பிட சாப்பாத்தி கொடுத்தார். சப்பாத்தியைக் கொடுத்ததால் கோபமடைந்த வெற்றி, மனைவியைத் திட்டியுள்ளார். பதிலுக்கு ராதிகாவும் கணவருடன் சண்டை போட்டார். இந்த சண்டையில் மனம் உடைந்த ராதிகா நேற்று நள்ளிரவில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
உடல் முழுவதும் தீ பரவியதில் படுகாயமடைந்த ராதிகாவை சென்னை கொண்டு வந்து கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications