அபுதாபியில் நடந்த சாலை விபத்தில் 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபி அருகே நடந்த சாலை விபத்தில் 3 இந்தியர்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். 38 பேர் படுகாயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் பேருந்தில் பயணித்தவர்கள் ஆவர். முசபா என்ற இடத்தில் பஸ் போய்க் கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டது.

விபத்துக்குள்ளான பஸ்சை பாகிஸ்தானைச் சேர்ந்த டிரைவர் ஓட்டிச் சென்றார். அந்தப் பஸ்சில் தொழிலாளர்கள் இருந்தனர். ஷபியா என்ற பாலத்தின் மீது பஸ் போய்க் கொண்டிருந்தபோது எதிர்பாரத விதமாக தாறுமாறாக ஓடி உருண்டு விழுந்தது.

இதில் 3 இந்தியர்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். பஸ் டிரைவரும், 2 தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

பஸ் அதி வேகமாக வந்ததே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+