காதலியைச் சந்தித்த வக்கீலுக்கு அடி, உதை-மனமுடைந்து தற்கொலை

Subscribe to Oneindia Tamil

நான்குநேரி: நான்குநேரி அருகே வக்கீலை ஓரு கும்பல் தாக்கியதால் மனமுடைந்த அவர்
தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் 10 பேரை கைது செய்தனர்.

நான்குநேரி நம்பி நகரை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் கண்ணன். இவர்
நான்குநேரியில் வக்கீலாக உள்ளார். நான்குநேரி தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும்
தற்காலிக பெண் ஊழியர் ஒருவரை காதலித்தார். இவர் ஏர்வாடியை சேர்ந்தவர். இவர்கள்
இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர்.

நேற்று முன்தினம் மாலை ஏர்வாடியில் உள்ள காதலியை சந்திப்பதற்காக கண்ணன் அவரது
வீ்ட்டிற்கு சென்றார். இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் கண்ணன் வீட்டிற்குள்
சென்றதும் கதவை வெளிப்புறமாக பூட்டினர்.

இதனால் செயவதறியாது திகைத்த கண்ணன் வீட்டின் பின்புறம் வழியாக தப்பிக்க
முயன்றார். அப்போது அங்கு நின்றவர்கள் கண்ணனை அடித்து உதைத்தனர். இதனால் அவர்
தான் கொண்டு வந்த பைக்கை போட்டு விட்டு தப்பியோடினார்.

வீட்டிற்கு வந்த கண்ணன் அவமானம் தாங்காமல் பூச்சி மருந்து குடித்து தற்கொலை
செய்து கொண்டார். இதுகுறித்து கண்ணனின் தந்தை முத்தையா ஏர்வாடி போலீசில்
புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் முத்துராஜ் விசாரணை நடத்தி வக்கீலை தாக்கிய ஏர்வாடியை சேர்ந்த
மனித நேய மக்கள் கட்சி தலைவர் அஜ்மத்கான், பக்ரூதின் அலி அகமது, ஷேக் முகமது,
முகைதீன் அப்துல் காதர், காதர் மூகைதீன், உள்பட 10 பேரை கைது செய்தனர்.

இவர்கள் மீது வக்கீலை தாக்கியதாகவும், தற்கொலைக்கு காரணமாக இருந்ததாகவும்
வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+