அவுட்சோர்சிங் பிரிவில் இந்தியாவை முந்தியது சீனா

ஆசியா முழுவதும் 280 முன்னணி நிறுவனங்களில் நடத்திய ஆய்வின்படி சீன நிறுவனங்களில்தான் தற்போது பெருமளவில் அவுட்சோர்சிங் நடைபெறுகிறதாம். சீனாவின் அவுட்சோர்சிங் மார்க்கெட் வேகமாக வளர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான சர்வேயை நடத்திய சீனாவின் கேபிஎம்ஜி நிறுவனத்தின் ஐடி பிரிவு தலைவர் எட்ஜ் ஜெரல்லா கூறுகையில், இந்தியாவில் உள்ளதைப் போன்ற வசதிகள் தற்போது சீனாவில் இல்லாவிட்டாலும் கூட இந்தியாவின் இடத்தை சீனா பிடித்துள்ளது என்பதே உண்மை. சீன நிறுவனங்களை நாடி பலரும் தற்போது அவுட்சோர்சிங்குக்காக வர ஆரம்பித்துள்ளனர்.
ஆசிய -பசிபிக் பிராந்தியத்தில் தற்போது சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சர்வேக்கு உட்படுத்ப்பட்ட நிறுவனங்களில் 42 சதவீத நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் கிளைகளை சீனாவில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூருக்கு இதில் 2வது இடம் கிடைத்துள்ளது. இந்தியா 3வது இடத்தில்தான் உள்ளது என்றார்












Click it and Unblock the Notifications