கைதான இருவரும் 500 பேருக்கு போலி மார்க் ஷீட்களை விநியோகித்துள்ளனர்-போலீஸ்
சென்னை: போலி மதிப்பெண் பட்டியலை விநியோகித்து கைதாகியுள்ள ஏகாம்பரம் மற்றும் திருவேங்கடம் ஆகிய இருவரும் இந்த ஆண்டு மட்டும் 500 பேருக்கு போலியான மதிப்பெண் பட்டியலை விநியோகித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிளஸ்டூ மாணவர்களுக்கு போலி மதிப்பெண் பட்டியலை விற்றதாக சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் ரெக்கார்ட் கிளார்க்காக பணியாற்றி வரும் ஏகாம்பரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய திருவேங்கடம் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த இருவரும் கடந்த 8 வருடங்களாக போலி சான்றிதழ்களை வழங்கி வந்துள்ளனர். இதற்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ. 10,000 வரை பணம் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் 500 பேருக்கு இவர்கள் போலி சான்றிதழ்களை விற்றுள்ளனர். அதில் 51 பேர் மட்டுமே தற்போது சிக்கியுள்ளனர். மற்றவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விரைவில் அவர்களிடமிருந்து சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications