For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசிய பாதுகாப்பு சட்ட பிரயோகத்தை எதிர்த்து சீமான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Google Oneindia Tamil News

சென்னை: தன்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்து சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளார்.

இதுகுறித்து சீமானின் வழக்கறிஞர் தடா சந்திரசேகரன் கூறுகையில்,

எந்த காரணமும் இல்லாமல் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர். தனிமை சிறையில் அடைத்து அவர் கொடுமைப்படுத்தப்படுகிறார்.

தமிழக மீனவர்களை பாதுகாக்க வலியுறுத்தி பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்வது கண்டிக்கத்தக்கது.

இந்த சட்டத்தில் சீமானை கைது செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். தேசிய பாதுகாப்பு சட்ட மறுஆய்வு குழுவிலும் அப்பீல் செய்வோம்.

ஏற்கனவே ஒரு முறை சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தபோது அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இரண்டு மாதத்திலேயே அவரை வெளியே கொண்டு வந்தோம்.

ராஜபக்சேயை எதிர்த்து பேசினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றால் தமிழர்களை படுகொலை செய்யும் சிங்கள அரசு மீது எந்த சட்டம் பாயும். இதுபற்றி எங்கள் மேல் முறையீட்டில் குறிப்பிடுவோம் என்றார் சந்திரசேகரன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X