போலி மதிப்பெண் சான்றிதழ் குறித்து விசாரிக்க தனிக் குழு: கருணாநிதி
சென்னை: போலி மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் மாணவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
என்ஜினீயரிங் கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த என்ஜினீயரிங் கவுன்சிலிங்கை முதல்வர் கருணாநிதி நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது கவுன்சிலிங்கின் மூலம் கல்லூரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி,
போலி மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது குறித்து விசாரிக்க துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பட்டத்தாரியே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து முதன் முதலாக பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர 78 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை 149 பேர் தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications