தண்டவாளத்தில் வீசி வாலிபர் கொலை: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு
நெல்லை: நெல்லை அருகே தண்டவாளத்தில் வீசி வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை அருகே உள்ள கட்டுடையார் குடியிருப்பை சேர்ந்தவர் முத்தையா என்ற மதார். இவருக்கும் தச்சநல்லூரை அடுத்த ஆனந்தபுரத்தை சேர்ந்த சாந்திக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முத்தையா குடும்பத்துடன் மும்பையில் தங்கி வேலை பார்த்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சாந்தி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முத்தையா மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அவரை சந்தித்த சாந்தியின் சகோதரர் குமார் தனது தங்கையுடன் சேர்ந்து வாழுமாறு கூறினார். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இதன்பிறகு சில நாட்கள் கழித்து கரையிருப்பு அருகே ரயில் தண்டவாளத்தில் காயங்களுடன் முத்தையா இறந்து கிடந்தார். இது தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து முத்தையாவுக்கு மது வாங்கி கொடுத்து ஓடையில் மூழ்கடித்து மயங்க செய்துள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த அவரை தச்சநல்லூர் பாலம் அருகே தண்டவாளத்தில் வீசியுள்ளதும், பின்னர் அந்த வழியாக வந்த ரயில் மோதி முத்தையா இறந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக குமார் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
முத்தையாவின் தாய் சுடலி, நெல்லை வக்கீல் கண்ணன் மூலம் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
முத்தையா கொலையில் உள்ளூரை சேர்ந்த முக்கிய நபர்கள் 12 பேருக்கு தொடர்பு உள்ளது. இது குறித்து நான் கடந்த 17-8-09 அன்று தச்சநல்லூர் போலீஸ் மற்றும் உயரதிகாரிகளிடம் புகார் செய்தேன். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாலா வழக்கு விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications