கரூர் கொங்கு நண்பர்கள் சங்க தேர்தலில் மோதல்-நாற்காலிகள் வீச்சு

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் கொங்கு நண்பர் சங்கத்தில், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்து எழுந்த பிரச்சனையில் மோதல் ஏற்பட்டது.

கரூர் கொங்கு நண்பர் சங்கம் பொதுக்குழு கூட்டம், தலைவர் விசா. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதற்கு செயலாளர் சுந்தரலிங்கம், பொருளாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், நிர்வாகிகள் தேர்வு அறிவிக்கப்பட்ட போது, ஒருமனதாக நிர்வாகிகளை தேர்வு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதற்கு என்.எஸ்.ஜெயபாலன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தலைவர் பதவிக்கு தான் போட்டியிட போவதாகவும் கூறினார்.

தேர்தல் நடுவர்களாக அம்மையப்பன், செல்லப்பன், ராஜேந்திரன் ஆகியோர் செயல்பட்டனர். இந்த நிலையில், ஜெயபாலனுக்கு ஆதரவாக கார்வேந்தன் உள்ளிட்டோர் சங்கத்தின் நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், நாற்காலிகளை வீசி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து, நிர்வாகிகள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+