பாபநாசத்தில் சுற்றுலா பயணிகளிடம் சோதனை-500 மதுபாட்டில்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் வனத்துறை செக்போஸ்டில் சுற்றுலா பயணிகளி்ன் வாகனங்கள் சோதனையிடப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றால சீசன் தற்போது களை கட்டியுள்ளது. இதனால் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் பாபநாசம் மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவிக்கும் செல்வதுண்டு. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் பாபநாசம் மலையில் உள்ள அகஸ்தியர் அருவி, காரையர் பாணதீர்த்த அருவி ஆகியவற்றிற்கு 1000க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பாபநாசம் வனத்துறை செக்போஸ்ட்டில் 2 நாட்களும் வாகன சோதனை நடந்தது. வானவர் சுப்புராம், வனக்காப்பாளர்கள் பிச்சை, முருகன் உள்பட பலர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதி்ல் சுமார் 500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications