கருணாநிதி கோரிக்கைப்படி இலங்கைக்கு அதிகாரிகள் குழு-மன்மோகன் சிங்

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh
டெல்லி: முதல்வர் கருணாநிதியின் கோரிக்கைப்படி இலங்கைக்கு ஒரு அதிகாரிகள் குழுவை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் திமுகவிடம் உறுதியளித்துள்ளார்.

டெல்லியில் நேற்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின்போது திமுக சார்பில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, இலங்கையில் தமிழர் பகுதிகளில் மறு குடியமர்த்தும் நடவடிக்கைகள் தாமதமாகி வருவது தொடர்பாக முதல்வர் கருணாநிதி, பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து எடுத்துரைத்தார்.

அதற்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதியின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்தியா அளித்துள்ள ரூ. 500 கோடி பணத்தை இலங்கை அரசு தமிழர் மறுகுடியமர்த்தல், மறு சீரமைப்புப் பணிகளுக்கு முறையாக செயல்படுகிறதா என்பதை ஆராய அதிகாரிகள் கொணட் குழு அங்கு அனுப்பி வைக்கப்படும் என்று உறுதியளித்ததாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+