ஸ்ரீபெரும்புதூர் செல்போன் நிறுவனத்தில் வாயு கசிவு-180 பேர் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
நேற்றிரவு 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஆலையில் வாசு கசிந்தது.
அதை சுவாசித்த 180 தொழிலாளர்களுக்கு வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டது. பலர் மயங்கி விழுந்தனர்.
மயங்கி கிடந்த தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்ப்டடு வருகிறது.
சம்பவம் தொடர்பாக நிறுவன அதிகாரிகள் கூறுகையில், விஷ வாயு ஏதும் கசியவில்லை. நேற்று ஆலையில் சில பகுதிகளில் பூச்சி மருந்து அடித்தோம். குளிரூப்பட்ட ஆலை என்பதால் அந்த மருந்து வெளியேறாமல் எல்லா பிரிவுகளுக்கும் பரவியுள்ளது. அதனால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்றனர்.












Click it and Unblock the Notifications