For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக்.கில்தான் இருக்கிறார் பின்லேடன்-பழங்குடிப் பகுதியே அல் கொய்தாவின் தலைமையிடம்: யு.எஸ்.

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருக்கிறார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பழங்குடியினப் பகுதிதான் அல் கொய்தாவின் சர்வதேச தலைமையிடமாக திகழ்கிறது எனக் கூறியுள்ளார் அமெரிக்க ராணுவத்தளபதி மைக் முல்லன்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒசாமா பின் லேடனும், அவருடைய தளபதியுமான ஈமான் அல் ஜவாஹிரி ஆகியோர் பாகிஸ்தானில்தான் பதுங்கியுள்ளனர். இதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இதன் காரணமாகவே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியை நாங்கள் தொடர்ந்து குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறோம். அந்தப் பகுதிதான் தற்போது அல் கொய்தா அமைப்பின் சர்வதேச தலைநகரமாக திகழ்கிறது என்றார் மைக் முல்லன்.

சமீபத்தில் இஸ்லாமாபாத் வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனும் இதேபோல கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X