கருணாஸை மிரட்டியவர் அடையாளம் கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கைக்குப் போகக் கூடாது என்று நடிகர் கருணாஸுக்கு மிரட்டல் விடுத்து பேசியவரின் தொலைபேசி எண் காஞ்சனா என்ற பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கை கதிர்காமர் முருகன் கோவில்தான் நடிகர் கருணாஸ் குடும்பத்தினரின் குல தெய்வக் கோவிலாம். அங்கு வைத்து தனது மகனுக்கு மொட்டை போட முடிவெடுத்தார் கருணாஸ். அதேசமயம், இலங்கை அரசு நடத்தும் எப்.எம். வானொலி நிகழ்ச்சியிலும் பங்கேற்க தீர்மானித்தார்.

இதையடுத்து தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. கருணாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்து எஸ்.எம்.எஸ் வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்தார். நாம் தமிழர் அமைப்பினர்தான் இதை செய்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் கருணாஸுக்கு வந்த தொலைபேசி எண்ணுக்கு உரியவர் காஞ்சனா என்பதும், முகவரி சாலிகிராமம் எனவும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட காஞ்சனாவைப் பிடித்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+