புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக யாழ்ப்பாணத்தில் இந்தியன் வங்கி கிளை
கடந்த சனிக்கிழமையன்று, வங்கியின் முதல் காலாண்டு செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது கூறுகையில்,
இந்தியன் வங்கியின் கிளை இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ளது. புலம் பெயர்ந்த தமிழர்களின் நலனுக்காக யாழ்ப்பாணத்தில் இன்னும் ஒரு கிளையைத் தொடங்க ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
கொழும்பு கிளையில் நடக்கும் மொத்த வர்த்தகத்தின் மதிப்பு ரூ. 800 கோடி ஆகும். இதில் ரூ. 300 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அன்மையில் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லிக்கு வந்திருந்தபோது யாழ்ப்பாணத்தில் ஒரு புதிய கிளை தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தை அடுத்து கண்டியில் மேலும் ஒரு கிளையை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதே போன்று இந்தோனேசியாவில் இன்னும் ஒரு பிரதிநிதி அலுவலகத்தை தொடங்க ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம்.
தற்போது இந்தியன் வங்கியில் 19 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 600 பேர் நடப்பு ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர். எனவே, ஓய்வு பெறுபவர்களுக்கு பதிலாக 1,000 பேரை தேர்வு செய்ய உள்ளோம்.
நடப்பு நிதி ஆண்டில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் வங்கியின் லாபம் கடந்த ஆண்டை விட 11 சதவிகிதம் அதிகரித்து ரூ. 368.15 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு முதல் காலாண்டின் லாபம் ரூ. 331.66 கோடி. வங்கியின் வருமானமும் 11 சதவிகிதம் உயர்ந்து ரூ. 2,477.25 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வங்கியின் வருமானம் ரூ. 2,230.39 கோடியாக இருந்தது. தற்போது இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2.10 கோடி என்று அவர் கூறினார்.