For Daily Alerts
Just In
ஆகஸ்ட் 2-ம் தேதி கோவை ஐ.டி. பூங்காவை திறக்கிறார் மு.க. ஸ்டாலின்
கோவை அவிநாசி ரோட்டில் அரசு மருத்துவக் கல்லூரி அருகே, எல்காட், தொழில் வளர்ச்சி கழகம் இணைந்து 9.5 ஏக்கரில் தகவல் தொழில் நுட்பப் பூங்காவை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் சுமார் 12 ஆயிரம் பேர் நேரடி வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
சர்வதேச தரத்திற்கு இணையாக இந்த பூங்கா கட்டப்பட்டுள்ளது. மேலும், தரைத் தளம் உள்பட 4 தளங்களும், தரைதளத்தின் கீழ் மூன்று தளங்களும் கொண்டதாக இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைய உள்ளதை முன்னிட்டு ஐ.டி. படித்த இளைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
Story first published: Monday, July 26, 2010, 15:17 [IST]