தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தனித்து போட்டி- இல.கணேசன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தனது ஆட்சியில் பிரச்சனை வரும்போது அதை திசை திருப்ப ஏதாவது ஒன்றை செய்கிறது. அப்படித்தான், தற்போது குஜராத் மாநில முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக போலி என்கெளண்டர் வழக்கில் சி.பி.ஐ. மூலம் அமைச்சராக இருந்த அமித் ஷாவை இழுத்திருக்கிறது.
மேற்கு வங்காளத்தில் ரயில் விபத்து, ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதம், மாவோயிஸ்டுகள் அட்டகாசம் நடைபெறுகிறது. இலங்கையில் போர் முடிவுற்ற பின்னர் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு அதிபர் ராஜபக்சே உரிமைகளை வழங்கவில்லை. அவர் வெற்றி இன வெறியாக மாறியுள்ளது.
படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. முஸ்லிம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு வழங்கப்படுவது போன்று இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும். அதற்கான பணிகளில் ஈடுபடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications