மேலவை தொகுதிகளின் வரையறைப் பட்டியல் தயார் - தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளதை அடுத்து தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தமிழக சட்ட மேலவைத் தொகுதிகளின் வரையறைப் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இது குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலக வட்டாரத்தில் கூறப்படுவதாவது,
தமிழக சட்ட மேலவைத் தொகுதிகளின் மறுவரையறை 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தயாரிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இந்த வரையறைப் பட்டியல் ஓரிரு நாட்களில் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் சேர, தமிழகம் முழுவதும் 27 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
இதில், மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் மனு அளித்திருப்பதாக கூறப்படுகின்றது.