லட்சக்கணக்கான லிட்டர் பாலைக் கொட்டி சிவசேனா போராட்டம்

லட்சக்ணக்கான குழந்தைகள் சரியாக பால் கூடக் கிடைக்காமல் தவிக்கும் நாடு இது. ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் எத்தனையோ குழந்தைகள் இறக்கின்றன. ஆனால் லட்சக்கணக்கான லிட்டர் பாலை சாலையில் கொட்டி போராட்டத்தை நடத்தியுள்ளது சிவசேனா.
பதப்படுத்தப்பட்ட பால் பவுடரை இறக்குமதி செய்ய அனுமதிக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அப்படிச் செய்தால் உள்ளூர் பால் பண்ணைத் தொழில் பாதிக்கப்படும் என்று அது கூறுகிறது.
இந்த நிலையில் தற்போது பாலைக் கொட்டி போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளது சிவசேனா.
2 நாட்களுக்கு முன்பு சதாராவில் ஐந்து பால் லாரிகளை தடுத்து நிறுத்திய சிசவேனா தொண்டர்கள் அதில் இருந்த 50,000 லிட்டர் பாலை சாலையில் கொட்டிக் கவிழ்த்தனர்.
நேற்று சதாரா பிரிவு சிவசேனாவினர் பால் லாரிகளை மீண்டும் தடுத்து நிறுத்தி பல லட்சம் லிட்டர் பாலை தரையில் கொட்டி வீணாக்கினர்.
பல லட்சம் லிட்டர் பாலை இப்படி சாலைகளில் கொட்டி வீணாக்கி வரும் சிவசேனாவின் போராட்டம் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications