தமிழக-கேரள எல்லையில் 2-வது நாளாக மரம் விழுந்து ரயில் போக்குவரத்து பாதிப்பு
புளியரை: தமிழக-கேரள எல்லை ரயில் பாதையில் 2-வது நாளாக மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லையான செங்கோட்டையில் இருந்து மலை வழியாக புனலூருக்கு ரயில் பாதை உள்ளது. இப்பாதையில் 4 பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 6.20க்கு 143 என்ற பயணிகள் ரயில் பகவதிபுரம் அருகே செல்லும்போது பெரிய மரம் ஒன்று தண்டவாளத்தின் குறுக்கே சரிந்து விழுந்தது. என்ஜின் டிரைவர் மணி சமயோசிதமாக ரயிலை நிறுத்தினார். பின்னர் 3 மணி நேரம் கழித்து ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை அதே போன்று புளியரை பகவதிபுரம் தாண்டி ரயில் செல்லும்போது பெரிய மரம் இரண்டு ரயி்ல் இன்ஜினில் விழுந்தது. இதனை பார்த்த இன்ஜின் டிரைவர் விரைவாக செயல்பட்டு ரயிலை நிறுத்தினார். இதனால் மலைப்பாதையில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மரத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications