ஆகஸ்ட் 1 முதல் தென்மாவட்ட ரயில்கள் நேரம் மாற்றம்
நெல்லை: மதுரை-திருப்பரங்குன்றம் இடையே மேம்பால பணிகள் காரணமாக ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தென்மாவட்ட ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
மதுரை-திருப்பரங்குன்றம் இடையே மேம்பால பணிகள் நடப்பதால் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில் எண்-786 விருதுநகர்-மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில் எண்-787 மதுரை-விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விருதுநகரில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும்.
நாகர்கோவில்-கோவை பயணிகள் ரயில் எண்-383 விருதுநகர்-மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விருதுநகர்-நாகர்கோவில் இடையே வண்டி எண்-384 ஆக மாற்றப்பட்டு அதே நேரத்தில் இயக்கப்படும்.
கோவை-நாகர்கோவில் பயணிகள் ரயில் எண்-384 மதுரை-விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மதுரை-கோவை இடையே வண்டி எண்-383 ஆக மாற்றப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.












Click it and Unblock the Notifications