Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆகஸ்ட் 1 முதல் தென்மாவட்ட ரயில்கள் நேரம் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: மதுரை-திருப்பரங்குன்றம் இடையே மேம்பால பணிகள் காரணமாக ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தென்மாவட்ட ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

மதுரை-திருப்பரங்குன்றம் இடையே மேம்பால பணிகள் நடப்பதால் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில் எண்-786 விருதுநகர்-மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில் எண்-787 மதுரை-விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விருதுநகரில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும்.

நாகர்கோவில்-கோவை பயணிகள் ரயில் எண்-383 விருதுநகர்-மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விருதுநகர்-நாகர்கோவில் இடையே வண்டி எண்-384 ஆக மாற்றப்பட்டு அதே நேரத்தில் இயக்கப்படும்.

கோவை-நாகர்கோவில் பயணிகள் ரயில் எண்-384 மதுரை-விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மதுரை-கோவை இடையே வண்டி எண்-383 ஆக மாற்றப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+