வேளாங்கண்ணி கோவில் திருவிழாவிற்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே
சென்னை: வேளாங்கண்ணி கோவில் திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திறகு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
வேளாங்கண்ணி கோவில் திருவிழாவை முன்னிட்டு, சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு ஆகஸ்டு மாதம் 28, 30 ஆகிய தேதிகளிலும் மற்றும் செப்டம்பர் மாதம் 2, 4 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இரவு 10.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் (வ.எண்.0619) மறுநாள் காலை 6.55 மணிக்கு நாகப்பட்டினத்தை சென்றடையும்.
ஆகஸ்டு மாதம் 29, 31 ஆகிய தேதிகளிலும் மற்றும் செப்டம்பர் மாதம் 3, 5 ஆகிய தேதிகளிலும் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில்(0620) மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூருக்கு வந்து சேரும்.
சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு செல்லும் சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியுர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வரும் ரயில் கூடுதலாக மாம்பலத்தில் நின்று செல்லும். இன்று காலை முதல் இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications