தமிழகத்தில் திட்டமிட்டபடி உணவு உற்பத்தி-கை கொடுத்த இஸ்ரேல் தொழில்நுட்பம்

இதில் 8.5 மில்லியன் டன் அரிசியாகும். 2.3 மில்லியன் டன் பருப்பு வகைகளாகும்.
தமிழகத்தில் இந்தாண்டு ஜூன் முதல் ஜூலை 14ம் தேதி 131.6 மி.மீ மழை பெய்தது. இது வழக்கமான சராசரி மழை அளவான 71.5 மி.மீயைவிட மிக 84 சதவீதம் அதிகமாகும்.
ஆனால், பயிர்கள் சாகுபடி செய்யப்படும் முக்கியமான காவிரி டெல்டா மாவட்டங்களில் போதுமான மழை பெய்யவில்லை. இதனால் காரிப் பருவ பயிர்களை சாகுபடி செய்ய மேட்டூர் அணை திறக்கப்படுவதை ஆவலுடன் எதி்ர்பார்த்துக் காத்திருந்தனர் விவசாயிகள்.
அதே நேரத்தில் குறைவான நீரைக் கொண்டு அரிசி சாகுபடி செய்ய தமிழக அரசு system rice intensification-SRI என்ற திட்டத்தை இந்த மாவட்டங்களில் அறிமுகப்படுத்தியது. இதன்படி சுமார் 2,000 ஹெக்டேர் பரப்பில் குறைவான நீரைக் கொண்டு அரிசி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய தொழில்நுட்பமான இதை இப்போது வறண்ட மாவட்டமான தர்மபுரியில் 22,000 ஹெக்டரில் சோதனையிட்டு வருகிறது தமிழக அரசு.
இதற்கிடையே நேற்று முன் தினம் மேட்டூர் அணை திறக்கப்பட்டுவிட்டதால் சம்பா சாகுபடிக்கு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் தயாராகி வருகின்றனர். ஆனால், அணையில் 82 அடியே நீர்மட்டம உள்ள நிலையில் சம்பா பயிர்கள் அறுவடை முழுக்க முழுக்க வட-கிழக்குப் பருவ மழையையே நம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications