For Daily Alerts
Just In
இங்கிலாந்தில் இந்திய வம்சவாளியைச் சேர்ந்த இளைஞர் கொலை
லண்டன்: இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேன்ட் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது பெயர் நிது பாபு தாஸ். 23 வயதான அவர் கடந்த வாரம் கத்தியால் குத்தப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிவந்தார். இந்த கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவரது தந்தை டாக்சி டிரைவராவார். ஜூலை 26ம் தேதி அதிகாலை 2.45 மணியளவில் தாஸ் கத்தியால் குத்தப்பட்டார். உடனடியாக அவரை லாக்போரா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆண்ட்ரூ ஸ்மித், எலைன் பென்டெரி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Story first published: Saturday, July 31, 2010, 16:16 [IST]