தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக பிரவீன்குமார் பொறுப்பேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக பிரவீன் குமார் இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்து வந்த நரேஷ்குப்தா இன்று பிற்பகலுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக பிரவீன் குமார் இன்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுவரை தமிழக நிதித்துறையில் செயலாளராக (செலவினம்) பணியாற்றி வந்தார் பிரவீன்குமார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் 1987ம் ஆண்டு முதல் தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இவரது மனைவி அனிதாவும் தமிழக ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.












Click it and Unblock the Notifications