குமரி மாவட்டத்தில் தொடரும் மர்ம காய்ச்சல்: மேலும் 2 பேர் பலி
திங்கள்சந்தை: குமரி மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் வார்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் உள்பட 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது போன்று மாவட்டம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மர்ம காய்ச்சலுக்கு ஏற்கனவே 8 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையி்ல் நாகர்கோவில் அருகே உள்ள ஆளூர் பகுதியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் நேற்று பலியாகி உள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
ஆளூர் அருகே உள்ள புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் கோகுல்ராஜ். இவர் கங்கான்கடையில் உள்ள பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவரை கடந்த 2 நாட்களுக்கு முன் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதே போல் ஆளூரை அடுத்த ஸ்ரீகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது.
நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். குமரியில் தொடர்ந்து வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications