For Daily Alerts
Just In
எம்பிபிஎஸ் படித்து விட்டு கண் ஆபரேசன்-டாக்டர் கைது
புனலூர்: எம்பிபிஎஸ் படித்து விட்டு சட்டவிரோதமாக கண் அறுவை சிகிச்சைகள் செய்து வந்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.
தமிழக-கேரள எல்லையிலுள்ளது புனலூர். அந்த நகரி்ன் மையப்பகுதியில் கண் சிகிச்சை மையம் நடத்தி வருபவர் டாக்டர் நோயல்தாஸ் லாசரஸ் எஸ்தர் ராஜ். இவர் 1972ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்று தமிழக மருத்துவக் கழகத்தில் பதிவு செய்தவர்.
சுமார் 20 ஆண்டு காலமாக இவர் கண் சிகிச்சை குறித்து சிறப்பு படிப்பு படிக்காமலேயே கண் அறுவை சிகிச்சைகள் செய்து வருவதாக மாநில அரசுக்கு புகார்கள் சென்றது. இதை தொடர்ந்து புனலூர் இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையில் போலீசார் அம்மருத்துவமனைக்கு சென்று சோதனை நடத்தினர்.
மேலும் கண் மருத்துவம் படிக்காமல் அறுவை சிகிச்சை செய்ததற்காக மருத்துவரை கைது செய்து மருத்துவமனையையும் பூட்டி சீல் வைத்தனர்.
Comments
Story first published: Wednesday, August 4, 2010, 14:51 [IST]