திருப்பூர் சாயக்கழிவு பாதிப்பு-நிவாரணம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
கரூர்: திருப்பூர் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருப்பூரில் இருந்து வெளியாகும் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலந்து, பாசன நீர் மற்றும் விவசாயத்தை கடுமையாக பாதித்துள்ளது.
இதனால், கரூர் மாவட்டத்தில் ஆத்துப்பாளையம் அணை பாசன விவசாயிகள் 11 ஆயிரத்து 968 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு உயர் நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், சாயப்பட்டறை உரிமையாளர்களிடம் ரூ. 25 கோடி இழப்பீடு வசூலிக்கப்பட்டது.
ஆனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையில் 50 சதவிகிதம் தான் முதல் தவணையாக வழங்கப்பட்டது. மீதி தொகை கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனே இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications