683 அரசு டாக்டர்கள் விரைவில் நியமனம்: ஆகஸ்ட் 2வது வாரம் நேர்காணல்
சென்னை: தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளது. அவற்றை நிரப்ப 683 புதிய அரசு மருத்துவர்களை அரசு விரைவில் நியமிக்கவுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்துள்ள மருத்துவர்கள் மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். ஒப்பந்த விதியின் கீழ் (10 ஏ1) நியமிக்கப்படும் அரசு மருத்துவர்களின் மாதச் சம்பளம் ரூ. 30 ஆயிரம்.
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களின் எண்ணிக்கை 1,589. இவற்றில் மொத்தம் 3, 987 மருத்துவர்கள் பணி புரிகின்றனர். இருப்பினும் அந்த மையங்களில் தற்போது 702 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களில் 683 காலியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.
இந்த பணிகளுக்கான நேர்காணலை இந்த மாதம் இரண்டாவது வாரம் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2008-2009-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் கூட நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே 34 விஷமுறிவு சிகிச்சை மையங்கள் உள்ளன. இவை கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 55,000 பேர் விஷமுறிவு சிகிச்சை பெற்றுள்ளனர். அவ்வாறு சிகிச்சை பெற்றவர்களில் 98 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர்.
எனவே, விஷமுறிவு சிகிச்சை மையத்தின் முக்கியத்துவத்தை கருதில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் ரூ.4 கோடியில் மேலும் 32 விஷமுறிவு சிகிச்சை மையங்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது மட்டுமின்றி ரூ.33 கோடியில் கூடுதலாக 200 அவசர சேவை ஆம்புலன்ஸ்கள் ('108') வாங்கவும் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவைகளுக்கான அரசாணைகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications