சோராபுதீன் வழக்கு-மாஜி குஜராத் டிஜிபி ஓ.பி. மாத்தூர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
Subscribe to Oneindia Tamil
காந்திநகர்: சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில், குஜராத் மாநில முன்னாள் டிஜிபி ஓ.பி.மாத்தூர் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.
சோராபுதீன் வழக்கை குஜராத் சிஐடி விசாரித்து வந்தபோது அந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் மாத்தூர்.
அவரை விசாரணைக்கு வருமாறு கூறி சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து இன்று மாத்தூர் விசாரணைக்கு ஆஜரானார்.
சிஐடி பிரிவு தலைவராக இருந்த மாத்தூர் பின்னர் அகமதாபாத் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.அதன் பின்னர் டிஜிபி பதவிக்கு உயர்ந்து ஓய்வு பெற்றார். தற்போது குஜராத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ரக்ஷா பல்கலைக்கழகத்தின் தலைமை பொறுப்பை வகித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications