கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-வீட்டு உரிமையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை

சமீபத்தில், இந்த ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. இருப்பினும் வீடுகளுக்கு 2 மாதங்களுக்கு 600 யூனிட் வரை பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மின் கட்டணத்தை சாக்காக வைத்து வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீடுகளில் வாடகைக்கு இருப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆணையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் இருந்து மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளின் மீது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கவனம் ஈர்க்கப்படுகிறது.
வீட்டின் உரிமையாளர்கள் அதே வளாகத்தில் கூடுதலாக மின்னிணைப்பு பெற முடிவு செய்கையில் மேம்பாட்டுக் கட்டணம் மற்றும் மின்னிணைப்புக் கட்டணம் ஆகியவற்றில் இருந்து ஆணையத்தின் 24-6-2003 நாளிட்ட மின் கட்டண ஆணை எண் 1-3-ன்படி விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். வாடகைதாரர்களின் நலன் கருதியும் வீட்டு உரிமையாளரின் சுமையைக் குறைப்பதற்காகவும் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஆணையைப் பொருட்படுத்தாது சில வீட்டின் உரிமையாளர்கள், வாடகைதாரர்களிடம் இருந்து அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இரண்டு மாதங்களுக்கான மின் நுகர்வு 600 யூனிட்டுகளுக்கு மேற்படுகையில் வீட்டு மின் நுகர்வோருக்கான அதிகபட்ச மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.4.05 மட்டுமே ஆகும்.
எனவே, வீட்டின் உரிமையாளர்கள் யூனிட் ஒன்றுக்கு ரூ.4.05-க்கு மேல் மின் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதமான செயலாகும். ஒரு வீட்டின் மொத்த மின் நுகர்வு 600 யூனிட்டுக்கு குறைவாக இருக்குமானால், மின் நுகர்வைப் பொறுத்து யூனிட் ஒன்றுக்கு ரூ.2.20, ரூ.1.50, ரூ.0.80, ரூ.0.75 மட்டுமே சட்டப்படி வசூலிக்க முடியும்.
வாடகைதாரர்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்தல், 2003-ம் ஆண்டு மின்சார சட்டத்தின் 142 மற்றும் 146-ம் பிரிவுகளின்படி ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும், 3 மாதங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படத்தக்க குற்றமாகும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் இது குறித்து மின்சார சட்டத்தின் 142-ம் பிரிவின்படி ஆணையத்தின் முன்பு அல்லது மின்சார சட்டத்தின் 146-ம் பிரிவின்படி உரிய குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு புகார் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications