சீமான் கைதைக் கண்டித்து இன்று புதுக்கோட்டையில் நாம் தமிழர் கூட்டம்
புதுக்கோட்டை: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று புதுக்கோட்டையில் அந்த அமைப்பின் சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெறுகிறது.
இலங்கை கடற்படைக் காடையர்களால் தமிழக மீனவர்கள் தாக்கி படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சீமான், சிங்களர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி சீமானைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். தேசிய பாதுகாப்புச் சட்டமும் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தொடர் கூட்டங்களை நடத்த நாம் தமிழர் திட்டமிட்டுள்ளது.
அதன்படி முதல் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு புதுக்கோட்டையில், சின்னப்பா பூங்காவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் கலந்து கொண்டு பேசுகிறார். ஆனால் மற்ற ஈழ ஆதரவு கலைவர்கள் யாரும் கலந்து கொள்ள முன்வரவில்லையாம்.












Click it and Unblock the Notifications