பெண்ணின் கற்பழிப்புப் புகார்-திமுக நகராட்சித் தலைவர் கைது
ராமேஸ்வரம்ச இளம் பெண் கொடுத்த கற்பழிப்புப் புகாரின் பேரில் நகராட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் நகராட்சித் தலைவராக இருப்பவர் ஜலில். திமுகவைச் சேர்ந்த இவர், தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கீழ்க்கரைக்கு சென்றுள்ளார். அங்கு ஜாஸ்மீன் என்ற பெண்ணை கடத்தி வந்துள்ளனர்.
பின்னர் ராமேஸ்வரம் அருகில் உள்ள விருந்தினர் மாளிகை ஒன்றில், தனது நண்பர்கள் 5 பேருடன் ஜாஸ்மீனை ஜலில் கற்பழித்துள்ளார். மேலும் செல்போன்களில் இதை படமாகவும் பிடித்துள்ளனர்.
மயக்கம் தெளிந்த ஜாஸ்மீன், ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் ஜலில் உள்பட 6 பேர் மீது கற்பழிப்பு புகாரை கொடுத்துள்ளார். மேலும் ராமநாதபுரம் எஸ்.பி. பிரதீப்குமாரை நேரில் சந்தித்து, நடந்த விபரங்களை வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து எஸ்.பி. பிரதீப்குமார் உத்தரவின் பேரில், ஜலில் உள்பட 6 பேரை ராமேஸ்வர போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ராமேஸ்வரம் திமுக நகராட்சித் தலைவர் ஜலில் கற்பழிப்பு வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.