தமிழகத்தில் தொழிற்புரட்சி நடக்கிறது: நெல்லை பட்டமளிப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு

நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமை வகித்தார். துணைவேந்தர் காளியப்பன் வரவேற்புரை அளித்தார். விழாவில் 1040 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் ஒரு லட்சம் பேருக்கு 200 பேர் பொறியியல் கல்வியும், 100 பேர் பலவகை தொழி்ல் நுட்ப கல்வியும் பெறுகின்றனர். இந்தியாவிலேயே தொழிற்கல்வியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என அகில இந்திய தொழி்ல் நுட்பக் கழக அறிக்கை தெரிவிக்கிறது. வளர்ந்த நாடுகளில் உள்ள தரத்துக்கு இணையாக தமிழ்நாட்டில் தொழிற்கல்வி நிறுவனங்களின் தரம் உயர்வதால் தான் உலக அளவில் நம் மாணவர்களால் போட்டியிட முடிதிறது.
தமிழகத்தில் முதல் அமைச்சர் கருணாநிதியின் ஆட்சியில் தொழிற்புரட்சி நடக்கிறது. அனைத்து துறை வளர்ச்சிக்கும் பொறியாளர்களின் சேவை தேவைப்படுகிறது. இன்று பொறியியல் பட்டம் பெறும் அனைவரும் தன்னம்பிக்கையுடன் இந்த சமுதாயத்தில் அடியெடுத்து வையுங்கள். பிரகாசமான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications