ராணிப்பேட்டை அதிமுக கூட்டத்தில் திமுகவினர் சரமாரி கல்வீச்சு
ராணிப்பேட்டை: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தின்போது திமுகவினர் சரமாரியாக கல்வீசித் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் உயர்வை கண்டித்து மத்திய, மாநில அரசுக்கு எதிராக இந்த பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கோஷமிட்டனர். பின்னர் கூட்டம் நடந்த மேடை மீதும்,கூட்டத்தினர் மீது கல்வீச்சு நடந்தது. மொட்டை மாடியில் இருந்து இந்த கல்வீச்சு நடந்தது.
இதை பார்த்த அதிமுகவினர் மாடியை நோக்கி ஓடினர்.
அப்போது சிலர் காந்தி சிலை அருகே கட்டப்பட்டு இருந்த டியூப் லைட்டை உடைத்து நொறுக்கினர். இதில் சுமார் 20 டியூப் லைட்டுகள் சேதம் அடைந்தன. இதைத்தொடர்ந்து அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications