சுனந்தா புஷ்கருடன் சசி தரூர் ஆஜ்மீர் தர்காவில் பிரார்த்தனை
Subscribe to Oneindia Tamil
ஆஜ்மீர்: சுனந்தாவுடன் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு வரும் சசி தரூர், இன்று அவருடன் ஆஜ்மீர் தர்காவுக்குச் சென்று பிரார்த்தனை செய்யப்பட்டார்.
விரைவில் சுனந்தாவை மணக்கப் போகிறார் சசி தரூர். இந்த நிலையில் இருவரும் கோவில்களுக்குச் சென்று வருகின்றனர். சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில், சனி கோவில் ஆகியவற்றுக்குச் சென்றனர்.
இன்று இருவரும் ஆஜ்மீரில் உள்ள புகழ் பெற்ற காஜா கரீப் நவாஸ் தர்காவுக்குச் சென்றனர். அங்கு மலர்ப் போர்வையைப் போர்த்தி வழிபட்டனர்.
சுனந்தா தனது வருங்கால மனைவி என்று சசி தரூர் கூறியுள்ளார். அவர்களது திருமணம் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications