For Daily Alerts
Just In
10,117 கான்ஸ்டபிள் பணியிடத்திற்கு 1.74 லட்சம் பேர் தேர்வெழுதினர்
சென்னை: காவல்துறையில் நிரப்பப்படவுள்ள 10,117 காவலர் பணியிடங்களுக்கு இன்று தேர்வு நடந்தது. இதை 1 லட்சத்து 74 ஆயிரம் பேர் எழுதினர்.
தமிழகம் முழுவதும் 105 மையங்களில் இந்த எழுத்துத் தேர்வு நடந்தது. அதிகபட்சமாக மதுரையில் மொத்தம் 13 மையங்களில் 16 ஆயிரத்து 243 பேர் எழுதினர். சென்னையில் 7 ஆயிரம் பேர் எழுதினர்.
9 ஆயிரம் இரண்டாம் நிலை காவலர்கள், 487 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள், 630 தீயணைப்பு படைவீரர்கள் பணியிடங்களுக்கான தேர்வு இது.
இந்த பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வுகள் ஏற்கனவே முடிந்து விட்டன. 2வது கட்டமாக இன்று எழுத்துத்தேர்வு நடந்தது. இன்று தேர்வு எழுதியவர்களில் 22,771 பேர் பெண்கள்.
Comments
Story first published: Sunday, August 8, 2010, 15:53 [IST]