காதலருடன் ஓட முயற்சி-மகளை கொன்ற தந்தை-தடுத்த மனைவியும் கொலை
தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே காதலருடன் ஓட முயன்ற மகளை வெட்டிக் கொலை செய்தார் தந்தை. இதைத் தடுக்க முயன்ற தனது 2வது மனைவியையும் வெட்டிக் கொன்றார்.
தென்காசி அருகேயுள்ள பாவூர்சத்திரம் நாட்டார்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி வினைதீர்த்தான். இவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். 2வது மனைவி கனகமணி. இவரது மகள் அருணா தேவி (21).
அருணா தேவி இதே பகுதியை சேர்ந்த தேவராஜன் என்ற வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தேவராஜன் வேறு ஜாதியைச் சேர்ந்தவராம். காதலுக்கு தாய் கனகமணி ஆதரவு தெரிவித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்தார் வினைதீர்த்தான்.
ஆத்திரத்துடன் இருந்து வந்த வினைதீர்த்தான் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை அருணாதேவி கோவிலுக்கு செல்வதாக கூறி புறப்பட்டார். ஆனால் காதலருடன் ஓட அவர் திட்டமிட்டுள்ளதாக கருதிய வினைதீர்த்தான் மகளை தடுத்து நிறுத்தினார்.
இதையடுத்து அவருக்கும், அருணா தேவி, கனகமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வினைதீர்த்தான் அரிவாளால் அருணாதேவியை வெட்டி சாய்த்தார். இதை தடுக்க வந்த மனைவி கனகமணியை உலக்கையால் அடித்துக் கொலை செய்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரையும் கொலை செய்த வினைதீர்த்தான் வெறிய அடங்காத நிலையில், அப்படியே பாவூர்சத்திரம் காவல் நிலையத்துக்கு சென்று நடந்த விபரத்தை கூறி சரணடைந்தார்.
அதிர்ச்சி அடைந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று 2 உடல்களையும் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு நெல்லை ஏடிஎஸ்பி ராஜன், ஆலங்குளம் டிஎஸ்பி ஸ்டாலின், பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம், நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
கணவனே மனைவியையும், மகளையும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications