காதலருடன் ஓட முயற்சி-மகளை கொன்ற தந்தை-தடுத்த மனைவியும் கொலை

Subscribe to Oneindia Tamil

தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே காதலருடன் ஓட முயன்ற மகளை வெட்டிக் கொலை செய்தார் தந்தை. இதைத் தடுக்க முயன்ற தனது 2வது மனைவியையும் வெட்டிக் கொன்றார்.

தென்காசி அருகேயுள்ள பாவூர்சத்திரம் நாட்டார்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி வினைதீர்த்தான். இவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். 2வது மனைவி கனகமணி. இவரது மகள் அருணா தேவி (21).

அருணா தேவி இதே பகுதியை சேர்ந்த தேவராஜன் என்ற வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தேவராஜன் வேறு ஜாதியைச் சேர்ந்தவராம். காதலுக்கு தாய் கனகமணி ஆதரவு தெரிவித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்தார் வினைதீர்த்தான்.

ஆத்திரத்துடன் இருந்து வந்த வினைதீர்த்தான் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை அருணாதேவி கோவிலுக்கு செல்வதாக கூறி புறப்பட்டார். ஆனால் காதலருடன் ஓட அவர் திட்டமிட்டுள்ளதாக கருதிய வினைதீர்த்தான் மகளை தடுத்து நிறுத்தினார்.

இதையடுத்து அவருக்கும், அருணா தேவி, கனகமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வினைதீர்த்தான் அரிவாளால் அருணாதேவியை வெட்டி சாய்த்தார். இதை தடுக்க வந்த மனைவி கனகமணியை உலக்கையால் அடித்துக் கொலை செய்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரையும் கொலை செய்த வினைதீர்த்தான் வெறிய அடங்காத நிலையில், அப்படியே பாவூர்சத்திரம் காவல் நிலையத்துக்கு சென்று நடந்த விபரத்தை கூறி சரணடைந்தார்.

அதிர்ச்சி அடைந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று 2 உடல்களையும் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு நெல்லை ஏடிஎஸ்பி ராஜன், ஆலங்குளம் டிஎஸ்பி ஸ்டாலின், பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம், நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

கணவனே மனைவியையும், மகளையும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+