ஒகேனக்கல் குடிநீர் திட்டம்-தமிழக எல்லையில் பந்த்
Subscribe to Oneindia Tamil
மைசூர்: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து கர்நாடகத்தின் சாம்ராஜ் நகர் மாவட்ட எல்லைப் பகுதியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட சலுவளி கட்சி மற்றும் சில கன்னட சங்கங்கள் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் இந்தப் போர்ட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதற்கு இந்த மாவட்ட தனியார் பஸ் அதிபர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே இன்று சாம்ராஜ்நகரில் இருந்து தாளவாடி, சத்தியமங்கலம், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
மேலும் பெரும்பாலான அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. இந்த மாவட்டம் வழியாக வரும் பிற தமிழக வாகனங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.












Click it and Unblock the Notifications