இளங்கோவனை விமர்சித்துப் பேசிய திமுக பேச்சாளர் நீக்கம்
சென்னை: முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனை விமர்சித்துப் பேசிய திமுக பேச்சாளர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
இளங்கோவன் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியையும், திமுக அரசையும், அதன் திட்டங்களையும் விமர்சித்துப் பேசி வருகிறார். இதனால் திமுகவினர் கொதிப்படைந்துள்ளனர். இருந்தாலும் அவர் உள்நோக்கத்துடன் பேசி வருகிறார், கூட்டணியை உடைக்க முயலுகிறார். எனவே திமுக தரப்பில் யாரும் இதற்குப் பதிலளித்துப் பேசக் கூடாது என்று திமுக வினருக்கு குறிப்பாக தலைமைக் கழக பேச்சாளர்களுக்கு திமுக தலைமை கண்டிப்பான
உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் இந்த உத்தரவை மீறி வரும் வகையில் பேசிய திமுக பேச்சாளர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியி்ட்டுள்ள அறிக்கையில், காங்கிரசுடனான கூட்டணியை பாதிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் பேசி வரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பற்றி கட்சியினர் விமர்சிக்கக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி சென்னையில் நடந்த கூட்டமொன்றில் பேசிய திமுக பேச்சாளர் வாகை.முத்தமிழன் என்பவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுறார் என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications