நாராயண மூர்த்திக்குப் பதில் புதிய தலைவரைத் தேடும் இன்போஸிஸ்!

இந்தியாவின் டாப் நிறுவனங்களுக்கு புதிய தலைவர் தேடும் சீஸன் போலிருக்கிறது. சில தினங்களுக்கு முன்புதான் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவுக்கு பதில் புதிய தலைவரைத் தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.
இப்போது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களுள் ஒன்றான இன்போஸிஸ் தலைவர் நாராயண மூர்த்திக்கு பதில் புதிய தலைவரைத் தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர்.
இதற்கான வேலைகளை இன்போஸிஸின் நியமனக் குழு ஆரம்பித்துள்ளது. இதில் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் (non-executive) கேவி காமத் மற்றும் கார்னெல் பல்கலைக் கழக பேராசிரியர் ஜெஃப்ரி சீன் லேஹ்மன் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ஏற்கெனவே புதிய தலைமை குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளனர்.
"சரியான நேரத்தில் இந்த பணியைத் துவங்க வேண்டும். இரண்டு காலாண்டுகளுக்குள் இந்தப் பணி முடிந்துவிட வேண்டும்..", என்று நியமனக் குழுவினர் தெரிவித்ததாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் புதிய சவால்களைச் சமாளிக்கும் விதத்தில் இயக்குநர் குழுவை விரிவாக்குவது குறித்தும் நிர்வாகத்தில் பேச்சுக்கள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து கேட்டபோது, கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் இன்போஸிஸ் செய்தித் தொடர்பாளர்.












Click it and Unblock the Notifications