பாமக நிர்வாகக் குழுக் கூட்டம்-நாளை சென்னையில் கூடுகிறது

இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை சைதாப்பேட்டை அண்ணாசாலையில் உள்ள செக்கர்ஸ் உணவு விடுதியில் நாளை பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கட்சியை ஆயத்தப்படுவத்துவது குறித்தும், விலைவாசி உயர்வு, மின்வெட்டு பிரச்சனை பற்றி விவாதிக்கப்பட்டு இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
மேலும் நலிந்து வரும் விவசாயம், விவசாயிகளின் நலன் குறித்து, நாளை மாலை 4 மணிக்கு தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
நாளைய கூட்டத்தில் திமுகவுடன் கூட்டணி தொடர்பாக மீண்டும் பேசுவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. ஏற்கனவே இதற்காக மணி தலைமையில் ஐவர் குழுவை டாக்டர் ராமதாஸ் அமைத்துள்ளார். திமுக தரப்பிலிருந்து அழைப்பு வந்தால் போய்ப் பேசுவார்கள் என்றும் கூறியுள்ளார். ஆனால் இதுவரை திமுக தரப்பிலிருந்து எந்த மூச்சுப் பேச்சும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications