பிறந்த நாள் பரிசு வழக்கை தள்ளி வைக்க கோரிய ஜெ. மனு தள்ளுபடி
சென்னை தனக்குப் பிறந்த நாள் பரிசாக வந்த ரூ. 2 கோடி தொடர்பான வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை சென்னை சிபிஐ கோர்ட்தள்ளுபடி செய்து விட்டது.
1991 ம் ஆண்டில் இருந்து 96 ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல் அமைச்சராக பணியாற்றினார். 1992 ம் ஆண்டு ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது ரூ.2 கோடி மதிப்புள்ள 57 வங்கி டிமாண்ட் டிராப்டுகள் அவருக்கு பரிசாக வந்தன என்றும், அந்த பணத்தை அரசு கஜானாவில் செலுத்தாமல் தனது வங்கி கணக்கில் ஜெயலலிதா டெபாசிட் செய்தார் என்று புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஜெயலலிதா மீதும், இதற்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி முகமது இசாத் அலி விசாரித்து வருகிறார். ஜெயலலிதா உள்பட 3 பேரும் இந்த வழக்கை வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறார்கள் என்றும், ஆகவே, இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய நாள் குறிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ. மனுதாக்கல் செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென்று சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி அன்று மனுதாக்கல் செய்தார்.
இந்தப் பின்னணியில்இவ்வழக்கு மீதான இறுதி விசாரணை இன்று நடந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில்ல் மேல் முறையீடு செய்ய விருப்பதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் தர சிபிஐ மறுப்பு தெரிவித்தது. மேலும், மனுவை தள்ளுபடி செய்து வாதத்தை முடிக்க உத்தரவிட்டது.
அதேபோல, செங்கோட்டையன், அழகுதிருநாவுக்கரசு ஆகியோரின் வாதத்தையும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய அழகு திருநாவுக்கரசு சமீபத்தில்தான் திமுகவில் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications