அந்தமானில் அதிகாலையில் கடும் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
போர்ட்பிளேர்: அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சுனாமி அபாயம் ஏதும் ஏற்படவில்லை.
கடலுக்கடியில் 32 கி.மீ. ஆழத்தில் அதிகாலை 3.51 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.4 புள்ளிகளாகப் பதிவானது.
போர்ட்பிளேரில் இருந்து 300 கி.மீ. தூரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அந்தமான் முழுவதுமே உணர முடிந்தது. இதனால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறிக் கொண்டு கட்டடங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இதனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சுனாமி அலைகள் ஏதும் உருவாகவில்லை.












Click it and Unblock the Notifications